Thursday 26 January 2023

போலிகள் நெடுநாள் நிலைக்க முடியாது – 2

 இரங்கராஜன், கந்தன் அவர்களை சந்தித்து தன்  வீட்டில் நடந்ததற்கு மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு. (முன்னர் நடந்ததை அறிய பாகம் 1-ஐ காண்க)

இந்த முறை தாங்கள்  அனைவரும் கந்தனை அவரது வீட்டில் சந்திக்க விரும்புவதாக  கூறினார்.

கந்தனும் ஏற்று கொண்டார், பேரனின் செயலுக்கு தானும் வருந்துவதாக கூறினார்.

இரங்கராஜனுக்கோ கொண்டாட்டம் தாளவில்லை தனது பணக்கார நண்பர்களிடம் தான் கந்தனின் வீட்டு விருந்துக்கு செல்வதை கூறிக்கொண்டான்

 


அந்த நாளும் வந்தது, கந்தனின் வீட்டை அடைந்ததும் கந்தனின் பேரன் தான் வரவேற்றான்.

உள்ளே நுழைகிறபோது சொன்னான்  "வெளியிலிருக்கிற தொட்டியில் முகத்தைக்

கழுவி விட்டு வாருங்கள் " என்று

இரங்கராஜனுக்கோ வியப்பாக இருந்தது. "வழக்கமாகக் கை கால்களைக் கழுவி விட்டு வா!

என்று தானே சொல்வார்கள்! இவன் என்ன முகத்தைக் கழுவி வரச் சொல்கிறான் " என்று. அதனால் அவனிடமே  கேட்டு விட்டார்

அவன் பதில் சொல்லவில்லை.

சரி அவர்கள்  வீட்டிற்கு  வந்துள்ளோம் எனவே அவனோடு சண்டை போட வேண்டாம் என

எண்ணிக்கொண்டு  வேண்டா வெறுப்பாக முகம் கழுவச் சென்றார் .

முகத்தை கழுவி விட்டு அதற்கு மேல் இருக்கிற கண்ணாடியைப் பார்த்தபோது .

கிறுக்கலாக கந்தனின் பேரன் அதில் எழுதி இருந்தான்.


 

"வாருங்கள்...

முகத்தைக் கழுவி

அழுக்கைக் கழட்டி

எறிந்ததைப் போலவே

முகமூடியையும் கழட்டிவிட்டு

என் வீட்டிற்கு

உள்ளே வாருங்கள்" என்று.

 

-முனைவர் ஜா.சலேத் அவர்களது கவிதையால் ஈர்க்கப்பட்டு அடியேன்  எழுதிய சிறுகதை