Friday 21 January 2011

வெள்ளாடுகள்

ஒரு சிறு காட்டில் 30 செம்மறி ஆடுகளும் 10 வெள்ளாடுகளும் ஒன்றாக வளர்ந்து வந்தது. அவை அனைத்திற்கும் போதுமான உணவு கிடைத்தது ஆதலால் எந்தவிதமான பிரச்னையும் இன்றி அழகாக வாழ்கை சென்றது
அந்த செம்மறி ஆடுகளில் கொடூர எண்ணம் கொண்ட ஓர் ஆடும் இருந்தது, அது மற்ற செம்மறி ஆடுகளிடம் 10 வெள்ளாடுகளையும் துரத்தி விட்டால் இக்காடு நம் இனத்திற்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்ற நஞ்சை விதைத்து வந்தது ஆனால் மற்ற செம்மறி ஆடுகள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

முதல் கட்டமாக அந்த கொடூர செம்மறி ஆடு, வெள்ளாடுகளை சீண்டியது.
அதன் பின் அதற்க்கு செம்மறி ஆடுகளிடம் சிறிதளவு ஆதரவு கூடியது
பின்பு தைரியமாக ஒரு சிறிய வெள்ளாட்டை தாக்கியது.

கொடூர செம்மறி ஆட்டின் நோக்ககத்தை உணர்ந்து கொண்ட வெள்ளாடுகள் ஒரு கூட்டம் கூட்டியது, அதில் நாம் இதற்க்கு பதிலடி கொடுக்காவிட்டால்
நாம் அனைவரும் மடிவது நிச்சயம் ஆதலால் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டது.
அந்த தீர்மானத்தை 4 வெள்ளாடுகள் ஏற்று கொண்டது 6 வெள்ளாடுகள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி விட்டது ( நான் அமைதியானவன், அமைதியான வாழ்கை வாழ விரும்புபவன் என்றும் காட்டி கொண்டன. பதிலடி கொடுப்பதன் நோக்கமே ஓர் அமைதியான வாழ்கையை தேடித்தான் என்பதை மறந்து )

அதற்குள் அக் கொடூர செம்மறி ஆடு நஞ்சை விதைத்து 20 செம்மறி ஆடுகளை தன வசம் சேர்த்திருந்தது

வெறும் நான்கு வெள்ளாடுகள் 20 செம்மறி ஆடுகளையும் புரட்டி எடுத்தது ஆனால் 20 செம்மறி ஆடுகளும் மிக பெரிய போராட்டத்திற்கு பின் நான்கு வெள்ளாடுகளையும் கொன்று போட்டது

அதன் பின் அந்த கொடூர ஆடு தனது திட்டத்தின் படி மற்ற 6 வெள்ளாடுகளையும் எந்த வித போராட்டமும் இன்றி மிக கொடூரமாக கொன்றது.

கற்றது : வாய்ப்பு இருக்கும்போது அமைதியா போறவன் மாவீரனுக்கு சமமானவன் அது போற்றதக்கதும் கூட ஆனால் வேற வழி இல்லாத நேரத்திலும் அமைதியா போறது மிக கொடிய இழப்பை கொடுக்கும்

அமைதியா போறது தான் நல்ல பிள்ளைக்கு அழகு என்று வளர்ந்த சமூகத்தில், சில நேரத்தில் அமைதி கூட பேராபத்தை கொடுக்கும் என்று சொன்னால் ஏற்று கொள்கிற மனப்பக்குவம் இன்னும் வரவில்லை - அதான் ஒன்னாம் வகுப்பு கதைய திரும்ப சொன்னேன்..

No comments: