Thursday 28 February 2019

3000 வருடமாக மாறாத குணம்



திருவள்ளுவர் :-  தாமதமா வந்தேன்னு கோபமா 

வாசுகி :- உங்களுக்கு என் மீது காதல்  இருந்திருந்தால்  சீக்கிரம் வந்துருப்பிங்க.... 

திருவள்ளுவர் :- இந்த உலகத்தில எல்லாரையும் விட, அதிகமா  உன்னைத்தான் காதலிக்கிறேன்

வாசுகி:-  யாரையும் விடன்னா, அப்ப எத்தனை பேரை காதலிக்கிறே
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

திருவள்ளுவர் :-  நான் அந்த அர்த்தத்தில் சொல்லல.
 இந்த பிறப்பில் உன்னை தவிர வேறொருவரையும் காதலிக்க வில்லை, இப்ப சரியா

வாசுகி :- அப்போ அடுத்த பிறவியில் பிரிஞ்சிருவீங்களா…..??
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

திருவள்ளுவருக்கு தும்மலே வந்துருச்சி!!

வாசுகி :- நூறு வயசு
 
"திருவள்ளுவருக்கு அப்பாடா வாழ்த்திட்டா... நல்லவேளை இந்த பிரச்சனை இதோடு முடிந்தது,  தப்பித்தோம் என்று நினைத்தார்."

வாசுகி:-  ஆமா...., நான் உன் பக்கத்தில் இருக்கேன், அப்போ வேற யாரோ உன்ன நினைச்சிருக்காங்க அதனாலதானே தும்மின..
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

திருவள்ளுவர்:-  தும்முனது ஒரு குத்தமா....!!

கணவன் தன் மீது உயிராக இருக்கிறான் என்று தெரிந்தும் அதை அவன் வாயால் அடிக்கடி கேட்டு மகிழ்வது பெண்களின் செயல் என்று 3000 வருடங்களுக்கு முன்பே எழுதி வச்சுட்டாரு நம்ம ஐயன் திருவள்ளுவர்

குறிப்பு: ஐயா தமிழ் கடல் நெல்லை கண்ணன், அவர்களது பேச்சை எழுத்தாக்கியிருக்கிறேன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா... ரசித்தேன்...